பண மதிப்பிழப்பு தினம் கருப்பு தினமாக அனுசரிப்பு

கோவை, நவம்பர், 8: 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று கருப்பு தினமாக அனுசரித்தனர்.

நாட்டில் கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டு புழக்கத்தை ஒழிப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 8-ம்தேதியன்று மத்திய பாஜக அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அதிரடியாக மேற்கொண்டது. உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, வங்கிகளில் பணமாற்று நடவடிக்கையின் போது முதியவர்கள் உள்ளிட்ட பலர் கூட்ட நெரிசல் மற்றும் இதர விபத்துக்களினால் உயிரிழந்தனர். இதனிடையே, பண மதிப்பிழப்பு அறிவித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. 

இந்த தினத்தினை கருப்பு தினமாக அனுசரிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம், அஞ்சலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன்படி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரால் கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் கூறுகையில், லஞ்சம் ஒழியும், தீவிரவாதத்திற்குச் செல்லும் பணம் தடை படும், கருப்புப் பணம் ஒழியும் என்று பாஜக அரசால் சொன்னவை எதுவுமே நடக்கவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் அவதிக்குள்ளானதுடன் இதுவரை அதன் பாதிப்பில் இருந்து மீளவில்லை. சிறு, குறு தொழில் வணிகர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியினர் சார்பிலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...