பணமதிப்பிழப்பு ஒரு பெரும் வெற்றி: வானதி ஸ்ரீனிவாசன்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கியில் வரிசையின் நின்று உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் எந்த ஏற்பாடும் இல்லை எனவும் இது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என பா.ஜ.க மாநில செயலாளர் வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



கோவை காந்திபுரம் பா.ஜ.க அலுவலகத்தில் அவர்இன்று செய்தியாளகளை சந்தித்தார். அப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக 17.2 லட்சம் சந்தேகத்திற்கிடமான பணபரிவத்தனைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 3.68 லட்சம் கோடி பணம் சந்தேகத்திற்குரியது என கண்டறியப்பட்டு இருப்பதாகவும், 7.62 லட்சம் கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது எனவும், 1626 கோடி பெறுமானமுள்ள பினாமி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விபரங்களை வெளியிட்ட அவர், காஷ்மீரில் 75 சதவீதம் கல்லெறியும் சம்பவங்கள் குறைந்து இருப்பதாகவும் தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும், ஜி.எஸ்.டியாலும் சிறு, குறு நிறுவங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை களைய நடவடிக்கைகள் எடுக்கப்டுவதாகவும் அவர் தெரிவித்தார். 99 சதவீதம் பணம் திரும்பி வந்திருந்தாலும் அதில் கணக்கில் காட்டப்படாமல் இருக்கும் குறித்து விசாரணை நடத்தப்படுகின்றது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில் வரிசையில் நின்று உயிரிழந்த பொதுமக்களுக்கு நிவாரணம் கொடுப்பது தொடர்பாக மத்திய அரசிடம் ஏற்பாடு எதுவும் இல்லை எனவும் இது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்துவதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...