வரும் 11-ம் தேதி புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்கான இசை நிகழ்ச்சி


நவம்பர் 09 : தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ”பாடவா உன் பாடலை” என்ற இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர்களால் ”கேன்செல்லர் பவுண்டேசன்” என்ற தனியார் தொண்டு நிறுவனம் உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் புற்றுநோயிக்கு எதிரான போராட்டம் என்ற நோக்கில், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், ”பாடவா உன் பாடலை” என்ற இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வரும் 11-ம் தேதி சித்ரா கருத்தரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை சென்னையைச் சேர்ந்த ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் நடத்துகின்றனர். 1980-ம் ஆண்டுகளில் வெளிவந்த படங்களின் பாடல்கள் பாடப்படுகிறது. இதில், பங்கேற்கும் பார்வையாளர்களிடம் இசை அல்லது இந்த நிகழ்ச்சி தொடர்பான கேள்வி கேட்கப்படும். அதற்கு, முதலில் பதிலை கூறுபவருக்கு, தனக்கு பிடித்தமான பாடலை மேடையில் பாடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ரூ.250 மற்றும் ரூ500 டிக்கெட்டுக்கள் வழங்கப்படுகின்றன. இந்தக் கட்டணத் தொகையானது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ”பாடவா உன் பாடலை” இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுக்களை திரு. பத்மநாபன் (95004 -98333), திரு.கிருஷ்ணசுவாமி (98430 - 46664) ஆகியோரைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...