சோதனச்சாவடிகளில் வாகனதணிக்கை: இரண்டு நாட்களில் 468 பேர் மீது வழக்கு

கோவை, நவம்பர் 9: கோவை மாநகர எல்லைக்குள் உள்ள 10 சோதனைச்சாவடிகளில் நடத்தப்பட்ட வாகனதணிக்கையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 468 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கோவை மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-

கோவை மாநகரில் விபத்துக்களை குறைக்கும் விதமாக தினந்தோறும் காலை 7 மணி முதல் 9 மணி வரை மாநகர எல்லைகளில் உள்ள 10 சோதனைச்சாவடிகளில் வாகனதணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வாகனதணிக்கையின் போது ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்றும் (8-ம் தேதி) இன்றும் (9-ம் தேதி) இரண்டு நாட்களில் 468 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தினமும் தொடரும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...