5 லக்ஷத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் நிமோனியாவால் பாதிப்பு, தடுப்பூசி போடுவது அவசியம்


கோவை, நவம்பர் 10: இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட 5,64,200  குழந்தைகள்  நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அந்த நோயிலிருந்து குழந்தைகளைக் காக்க தடுப்பூசி போடுவது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தல்.

கோவையில் இந்திய குழந்தைகள்நல மருத்துவ சங்கத்தின் கோவை கிளை மருத்துவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.



இந்த சந்திப்பின் போது நிமோனியா நோயின் பாதிப்புகளும் அதனை எவ்வாறு தடுக்கலாம் என விவாதிக்கப்பட்டது.

 சர்வதேச அளவில் நிமோனியா நோய் ஏற்பட காரணமான ஸ்ட்ரெப்டோகாக்ஸ் நிமோனிக்கா என்னும் பாக்டீரியாவால் இறப்பு சதவிகிதம் மூன்றில் ஒரு பங்கு உள்ளது.

இந்த நோய் 5 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை அதிக அளவில் தாக்குகிறது.

இதுக்குறித்து இந்திய குழந்தைகள்நல மருத்துவ சங்கத்தின் கோவை கிளை தலைவர் டாக்டர் எம்.இஸ்மாயில் கூறியதாவது, நிமோனியா நோயை தடுக்க தற்போது நம்மிடம் பிசிவி 13 என்ற தடுப்பூசி உள்ளது. இதன் மூலம் லட்சம் குழந்தைகளை இந்த நோயிலிருந்து காக்க முடியும். 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



இந்தியாவில் இந்தாண்டு மார்ச் முதல் தான் இந்த தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டது. 2௦18-ம் ஆண்டுக்குள் 9௦ சதவிதம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

2௦15-ம் ஆண்டு மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட 5,64,200  குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11,5௦௦ குழந்தைகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

ஐக்கிய நாடுகள் திட்டம் மூலம் இந்த ஆண்டில் 21 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நோயை தடுக்கும் முறை பற்றி பெற்றோர்களுக்கு இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் சிறப்பான முறையில் எடுத்து கூறிவருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிமோனியா நோயை தடுக்கும் முறை குறித்து மருத்துவர் ஜெயஸ்ரீ கூறுகையில், "குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவது அவசியம். போதுமான ஊட்டசத்துகளை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்," என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...