மணல் ஒப்பந்ததாரர் இல்லத்தில் 2-வது நாளாக நீடித்த வருமான வரித்துறை சோதனை


கோவை, நவம்பர் 10 

கோவையில் மணல் ஒப்பந்ததாரர் ஒ. ஆறுமுகசாமி, தொழிலதிபர் சஞ்சீவன் வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை தொடர்ந்து வருகிறது. 

சென்னை, கோவை, தஞ்சை மற்றும் பெங்களூரூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் உறவினர் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் நேற்று முதல் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. கோவையில் மட்டும் 7 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

இந்த நிலையில், மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் பந்தயச்சாலை பகுதியில் உள்ள வீடு, அவினாசி சாலை மற்றும் ராம்நகர் பகுதியில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இதேபோல, நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த சஞ்சீவனுக்கு சொந்தமான போத்தனூர் பகுதியில் உள்ள நீலகிரி ஃபர்னிச்சர் கடை, வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது. 

இருவரது வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று தொடங்கிய இந்தச் சோதனை, இன்று இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது. இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...