ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவலர்களுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்


கோவை, நவம்பர் 10 

ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட காவல்துறை ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் ஆகியோரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

கோவை மாவட்டம் கோவில்பாளையம் விநாயகபுரம் பகுதியில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய இளஞ்செழியன் என்பவர் பெயரை வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக, காவல் நிலைய ஆய்வாளர் சேகரன் மற்றும் தலைமைக் காவலர் தனபால் ஆகியோர் ரூ. 5000 லஞ்சம் பெற்றதாக கடந்த 7-ம் தேதி கைது செய்யப்பட்டனர். 

காவலர்கள் இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், இன்று காலை நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தினர். அப்போது, சேகரன் மற்றும் தனபால் ஆகியோரை வரும் 24-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மினோ உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...