சிறையில் 5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

கோவை, நவம்பர் 10

கோவை மத்திய சிறையில் 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் பிரபாகரன், சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது மயங்கி விழுந்தார்.

சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, கருமத்தம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் சமூக ஆர்வலர் பிரபாகரன், மனோகரன், வேலுச்சாமி ஆகியோர் கடந்த 6-ம் தேதி போராட்டம் நடத்தினர். தடையை மீறி போராட்டம் நடத்தியதால் 3 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளைப் போலீஸார் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதனைக் கண்டித்து 3 பேரும் கோவை மத்திய சிறையில் இன்று 5-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், கனியூர் சுங்கச்சாவடிக்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கு தொடர்பாக சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்ட போது, பிரபாகரன் நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பிரபாகரன் சூலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...