இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - அஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பு

நவம்பர் 10

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னணி ஆல்ரவுண்டர்கள் அஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி கொல்கத்தாவில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்து வந்த ஹர்திக் பாண்டியாவிற்கு இந்தத் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், சமீப காலமாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் இடம் பிடிக்காமல் இருந்த அஸ்வின், ஜடேஜா ஆகியோர் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ளனர். மற்றபடி இந்திய டெஸ்ட் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அவருக்குப் பதிலாக கூடுதல் பேட்ஸ்மேன் சேர்க்கப்படவில்லை.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம் பின்வருமாறு : 

1. விராட் கோலி (கேப்டன்), 2. லோகேஷ் ராகுல், 3. முரளி விஜய், 4. தவான், 5. புஜாரா, 6. ரகானே, 7. ரோகித் சர்மா, 8. சகா (விக்கெட் கீப்பர்), 9. அஸ்வின், 10. ஜடேஜா, 11. குல்தீப் யாதவ், 12. மொகமது ஷமி, 13. உமேஷ் யாதவ், 14. புவனேஸ்வர் குமார், 15. இசாந்த் ஷர்மா.

இதனிடையே, முதல் டெஸ்ட் போட்டிக்கு ஆயத்தமாகும் வகையில், சண்டிமால் தலைமையிலான இலங்கை அணி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவனுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் நாளை (நவம்.,11) தொடங்குகிறது.

இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் கிரிக்கெட் வாரிய தலைவர் லெவனுக்கு சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் கிரிக்கெட் வாரிய தலைவர் அணி வருமாறு:-

சஞ்சு சாம்சன் (கேப்டன்), அபிஷேக்குப்தா, ஆகாஷ் பண்டாரி, அவேஷ்கான், சக்சேனா, ஜிவான்ஜித்சிங், ரவிகிரண், ரோகன் பிரேம், சந்தீப், தமய் அகர்வால், சந்தீப் வாரியா, அமோல் பிரீத்சிங்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...