அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் கமல்ஹாசன் - மேற்கு வங்க முதலமைச்சருடன் சந்திப்பு

நவம்பர் 10 

மேற்கு வங்க மாநிலத்திற்குத் திரைப்பட விழாவுக்குச் சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன், அங்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசியுள்ளார். 

தனது பிறந்த நாளையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்து விட்டேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திப்பேன். அதன்பிறகு கட்சி பெயர் பற்றி முடிவு செய்து அறிவிப்பேன்” என்று கூறினார். இதற்காக புதிய செல்போன் செயலி ஒன்றையும் அறிமுகம் செய்தார். அரசியல் கட்சி தொடங்கத் தனது அன்பு ரசிகர்களுடன், விவசாயிகளும் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்றும் தெரிவித்தார். 

கமல் புதிய கட்சி தொடங்குவது குறித்து, ஏற்கனவே திருவனந்தபுரம் சென்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயனைச் சந்தித்து ஆலோசனை செய்தார். சமீபத்தில் சென்னை வந்த டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், கமல்ஹாசனை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். இருவரும் அரசியல் குறித்து பேசினர். அவரிடமும் தான் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை செய்தார். இவ்வாறு பாஜக, மற்றும் காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்களுடன் நெருக்கம் காட்டி வந்த அவர், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியையும் சந்திக்கத் திட்டமிட்டு இருந்தார். 

இந்த நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன், அங்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். தொடர்ந்து, அரசியல் பிரவேசத்திற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதன் மூலம், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அவர், தற்போது மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பெரும் சுறுசுறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...