போலீஸ் பாய்ஸ் கிளப்பைச் சேர்ந்த குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

கோவை, நவம்பர் 11

போலீஸ் பாய்ஸ் கிளப்பைச் சேர்ந்த 9 வயது முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. 



கோயம்புத்துார் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 மற்றும் ஏஆர்சி குழுமம், ஷிவா டெக்ஸ் யார்ன் ஆகியவற்றின் சார்பில் கோவை ஈச்சனாரியில் உள்ள லட்சுமி கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற கோவை மருத்துவர்கள் பங்கேற்ற இந்த முகாமில், 9–15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பொதுவான மருத்துவ பரிசோதனைகள், பல், கண் போன்ற பரிசோதனைகள் நடத்தப்பட்டன. 



மருத்துவப் பரிசோதனைக்குப்பின் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் படங்கள் காண்பிக்கப்பட்டன. காலை மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டன. 



இதில், கோவை காவல்துறை, சட்டம், ஒழுங்குத் துணை ஆணையர் லட்சுமி, கவுரவ விருந்தினராக பங்கேற்றார். ரவுண்ட் டேபிள் இன்டியாவின் ஏரியா 7-ன் திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், இளங்கோ ஆகியோர் கவுரவ விருந்தினராக பங்கேற்றனர்.

குழந்தைகளுக்கு இந்த மருத்துவ முகாம், சுகாதாரத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் மட்டுமின்றி திரைப்படமும் கண்டு களித்து, சிறந்த பொழுதுபோக்காகவும் அமைந்தது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...