உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரமளிக்க வலியுறுத்தி அமைச்சருக்கு கடிதம்

கோவை, நவம்பர் 11:  உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரமளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக அதன் தலைவர் வனிதா மோகன் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஜுன் மாதம் 21-ம் தேதி நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், குறிப்பாக கட்டுமானத்துறையில் ஒப்புதல் எளிதில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்அமைச்சர் அறிவித்திருந்தீர்கள்.

ஆனால், தற்போது, வீட்டுநல வாரியம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து கட்டிடம் கட்டுவதற்கான ஒப்புதலை அளிக்கின்றன அதனால், இந்த நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், கட்டுமானங்களுக்கு எளிதில் அனுமதி கிடைக்கும்படி, சட்டசபையில் அறிவித்ததைப் போல, உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரமளிக்க வேண்டும்.

எங்களதுவேண்டுகோளை ஏற்று உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...