கோவையைச் சேர்ந்த தொழிலதிபரின் செல்போன் எண்ணை 'ஹேக்' செய்து ரூ. 12.75 லட்சம் கொள்ளை



கோவை, நவம்பர். 12: 

கோவை என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (45). துடியலூர் பகுதியில் இயந்திர உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். 

இவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.12.75 லட்சம் பணம் காணாமல் போனதாக கடந்த வாரம் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த 2 மாதங்களுக்கு முன் ஆறுமுகம் செல்போன் சிம்கார்டு வேலை செய்யவில்லை. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் அளித்திருந்தார். அப்போது அந்த சிம்கார்டு வேறு ஒரு நபர் உபயோகித்துக்கொண்டிருப்பது தெரியவந்தது. 

அதே நேரத்தில், சிம்கார்டினை கொண்டு வங்கிக்கணக்கை 'ஹேக்' செய்த மர்ம நபர்கள் அதில் இருந்து இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரூ.12 லட்சத்து 75 ஆயிரம் வரை பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.  கொள்ளையடிக்கப்பட்ட பணம் லக்னோ மற்றும் டெல்லியில் உள்ள இரு வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது ஆறுமுகம் வங்கிக்கணக்கில் இருந்து இரு வேறு வங்கிக்கணக்கிற்கு பணத்தினை 'ஆர்.டி.ஜி.எஸ்' இணையவழி பண பரிமாற்றம் மூலமாக கொள்ளையடித்தது தெரியவந்தது.  மேலும், சம்மந்தப்பட்ட வங்கிக்கணக்கு வடமாநிலத்தை சேர்ந்ததாக தெரியவந்துள்ளது, என்று கூறினார். 

இந்த நிலையில், சம்மந்தப்பட்ட வங்கிக்கணக்கு யாருக்கு சொந்தமானது? என்பது  தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   வங்கிக்கணக்கில்  இருந்து ரூ.12.75 லட்சம் கொள்ளை போன சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை உண்டாக்கியுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...