மாணவர்களின் கல்விக்காக ரூ.50 லட்சம் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

நவம்பர் 12

தமிழ் திரையுலகில் சமீபத்தில் கால்பதித்த நடிகர் விஜய் சேதுபதி ஒரு சில குறிப்பிட்ட காலகட்டத்திலேயே ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தை வென்றதுடன் பல்வேறு சமூகசேவைப் பணிகளையும் செயலாற்றி வருகிறார். அதன்படி, தற்போது அரியலூர் மாணவிகளின் கல்விக்காக ரூ.50 லட்சத்தினை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் அணில் நிறுவனம் சேமியா தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. தற்போது பாரம்பரியம் மாறாமல் புதுச்சுவையுடன் ‘அணில் ஃபுட்ஸ்’ என்று அறிமுகமாகிறது. நவம்பர் 9-ம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்வில் கம்பு, வரகு, தினை, சோளம், கோதுமை ஆகிய சிறுதானியங்களை மூலப்பொருளாகக் கொண்ட அணில் நிறுவனத்தின் புதிய சேமியா வகைகளை விஜய் சேதுபதி அறிமுகம் செய்து வைத்தார்.



மேலும், அணில் உணவு வகைகளின் விளம்பரத் தூதுவராக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். புதிய ரகங்களை அறிமுகப்படுத்திய பின்னர் அவர் பேசியதாவது:-

“ இந்த விளம்பரப் படத்தில் நடித்ததற்காக எனக்குக் கிடைத்துள்ள தொகையில், ஒரு பகுதியை கல்வி உதவித் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளேன்.

கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக அரியலூர் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதம் 38,70,000 ரூபாயும், மேலும் தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு ஐந்து லட்சம் ரூபாயும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 11 அரசு செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும், மொத்தம் நாற்பது ஒன்பது லட்சத்து இருபதாயிரம் ரூபாய் (49,20,000) தமிழக அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளேன்” என்றார். 



இதனைத்தொடர்ந்து, அணில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான திரு.கமலஹாசன் பேசுகையில், "தற்போது துரித உணவுகளிலுள்ள ஈர்க்கும் வேதியியல் சுவைக்கு மயங்கும் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இதனால், மக்களின் நலனுக்காக மற்றும் குழந்தைகளுக்கும் பிடிக்கும் சுவையில், ஆரோக்கியமான முறையில், தரமான, உணவுகளைத் தயாரிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இந்தப் புதிய சிறுதானிய சேமியா வகைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்" என்றார்.



அரியலூர் எனும் சிறிய மாவட்டத்தில் இருந்து அதிக மதிப்பெண் எடுத்தும் மருத்துவராக ஆசைப்பட்டு, அது முடியாமல் உயிர் நீத்த அனிதாவின் நினைவாக விஜய் சேதுபதி இந்தத் தொகையை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...