புதுப்பொலிவுடன் வெளியாகியுள்ள மாநகராட்சி வலைதளம்

கோவை, நவம்பர் 12

கோவை மாநகராட்சி தொடர்பான பல்வேறு செய்திகள், தகவல்கள் மற்றும் இ-சேவை வசதிகள் அடங்கியுள்ள மாநகராட்சி வலைதளம், கூடுதல் தகவல்களோடு புதுப்பிக்கப்பட்டு கடந்த வாரம் வெளியிடப்படுள்ளது.



புதிதாக வெளியாகியுள்ள இந்த வலைதளத்தில் மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், வானிலை நிலவரம்,  புகைப்படங்கள், காணொளிக் காட்சிகள், மாநகராட்சியின் சமூகவலைதளப் பக்கங்கள், வாட்ஸ் ஆப் மற்றும் குறுந்தகவல் மூலமாக புகார் தெரிவிக்கும் எண்கள் உள்ளிட்ட தகவல்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.



மாநகராட்சிக்குட்பட்ட வரித்துறை, பொறியியல், நிர்வாகம், கல்வி, சுகாதாரம், நகரமைப்பு, ஸ்மார்ட் சிட்டி திட்டம், குப்பை மேலாண்மை மற்றும் குடிநீர் விநியோகம் ஆகிய அனைத்து துறைகள் பற்றிய தகவல்களும், அதில் பணிபுரியும் முக்கிய அலுவலர்களின் பெயர்கள், தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, மத்திய அரசின் சார்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்வச் பாரத், ஸ்வச்சத்தா போன்ற பல்வேறு திட்டங்களின் வலைதளங்கள் மற்றும் செயலிகளை எளிதாக தொடர்புகொள்வதற்கான வசதிகளும் இந்த  வலைதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.



மேலும், கோவை மாநகரில் உள்ள முக்கிய மருத்துவமனைகள், ஹோட்டல்கள், தொழில் நிறுவனங்கள், சுற்றுலாத் தளங்கள், கோவில்கள், பேருந்து வசதிகள், விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து நேரம் பற்றிய தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளன.

'இந்த வலைதளத்தை உபயோகித்து, அரசின் பல்வேறு இ-சேவைகளை மிக எளிதாக பயன்படுத்தலாம். மேலும், மாநகராட்சி நிர்வாகம் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரத்யேக செயலின் மூலமாக பொதுமக்கள் புகார்களை தெரிவிப்பதோடு, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் தெரிந்துகொள்ளலாம். இதனால், பொதுமக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் இடையே உள்ள தூரம் வெகுவாக குறையும்' என மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கூறப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...