கேஎம்சிஎச் புற்று நோய் மையத்தின் 6-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை, நவம்பர் 12

கேஎம்சிஎச் புற்றுநோய் மையத்தின் 6-ஆம் ஆண்டு விழா இன்று புற்று நோயிலிருந்து குணமடைந்த 300 நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கொண்டாடப்பட்டது.

கேஎம்சிஎச்-யின் புற்றுநோய் மையம் கடந்த 2011-ம் ஆண்டு துவங்கப்பட்டு, தற்போது புற்றுநோய் மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகியவற்றுடன் வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், இங்கு கதிரியக்க சிகிச்சை, ஆழமான காயம் தவிர்க்கும் எந்திர அறுவை சிகிச்சை, கீமோ சிகிச்சை, பாதிக்கப்பட்ட உடற்பகுதிக்கு மட்டுமான சிகிச்சை, ஹேமட்டோ சிகிச்சை ஆகிய அனைத்துவகை மருத்துவங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாகக் கடந்த 6 ஆண்டுகளில், இந்த மையம் 20,000-க்கும் மேலான புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொண்டுள்ளது. 32000-க்கும் அதிகமானோர் கீமோ சிகிச்சைகளையும், 4000-க்கும் அதிகமானோருக்கு ரேடியோ சிகிச்சைகளையும் அளித்துள்ளது.

இதனிடையே, இன்று கேஎம்சிஎச் மருத்துவமனையில் புற்று நோய் மையத்தின் 6-ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற அம்மருத்துவமனைத் தலைவர் மருத்துவர் நல்ல ஜி. பழனிசாமி பேசுகையில், "புற்று நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும். அதேவேளையில், இரண்டாம் நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் வாழ்வு நாட்களையும் நீட்டிக்கச் செய்ய இயலும். வலி நிவாரணநிலை, ஆதரவு நிலை என்ற நிலையிலுள்ள நோயாளிகளுக்கும்கூட வாழும் தரத்தை மேம்படுத்த கேஎம்சிஎச் என்றும் முயற்சிக்கிறது.

சிகிச்சையைப் போலவே நோய்த் தடுப்பும் முக்கியம். தொடர்ந்து பொதுமக்களிடையே நோயைக் கண்டறியவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உதவி வருகிறது," என்றார்.

இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற 'கலைமாமணி' திரு. மரபின்மைந்தன் முத்தையா, புற்றுநோயிலிருந்து மீண்டவர்களிடம் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...