உடுமலை அருகே ஐந்தரை லட்சம் கொள்ளை

திருப்பூர், நவம்பர் 13

உடுமலை அருகே அதிகாலையில் மளிகைகடையின் பூட்டை உடைத்து ஐந்தரை லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை..

தொடரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பெரியக்கோட்டை பிரிவில் மளிகை கடை நடத்தி வருபவர் சாந்தி (50) இவர் நேற்று வழக்கம் போல் கடையில் வியாபாரத்தை முடித்து கொண்டு இரவு வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்  இன்று காலையில் வழக்கம் போல் கடையை திறக்க முற்படும் போது முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே அருகில் இருந்தவர்களிடம் சாந்தி கேட்ட போது அதிகாலையில் இரண்டு மேற்பட்ட நபர்கள் கடையின் பூட்டை உடைத்து திருடி விட்டு தப்பி சென்றதை பார்த்து டீ கடையில் பணி புரிந்த ஊழியர்கள் அவர்களை துரத்தியும் அவர்களை பிடிக்க முடியவில்லை என டீ கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

 

இதற்கிடையில்  சம்பவம் குறித்து உடுமலை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

கடந்த சில நாட்களுக்கு முன் வங்கியில் விவசாயிடம் நூதன முறையில் பணம் கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் நடந்து இருக்கும் தருவாயில் இக் கொள்ளை சம்பவம் நடந்து இருப்பதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

சேமித்து வைத்து இருந்த ஜந்தரை லட்சம் அதிகாலையில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்வம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காவல் துறையினர் கூடுதலாக இப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...