வங்கிகளின் ஜப்தி நடவடிக்கையை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவை, நவம்பர் 14

விவசாயிகள் மீது வங்கிகள் நடத்தும் ஜப்தி நடவடிக்கையை கண்டித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பாக சூலூர் பேருந்து நிலையம் எதிரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



விவசாய சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர், திரு. பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கோவை மற்றும் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு, வங்கிகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இதுபற்றி திரு. பாபு கூறியதாவது, ‘விவசாயிகள் மீது வங்கிகள் நடத்தும் அராஜக ஜப்தி நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்து அனைத்து விவசாயிகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மேலும், பால் விலையை உயர்த்தக் கோரியும், ஜப்தி நடவடிக்கையில் உயிர் இழந்த விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் இந்த ஆர்பாட்டத்தின் மூலமாக வலியுறுத்துகின்றோம்’ என்றார்.

இந்த ஆர்பாட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளும், ஏர்முனை இளைஞர் அணியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...