அம்பேத்கர் மாணவர் விடுதியில் ராகிங் தொல்லை- மாணவர் புகார்

கோவை, நவம்பர் 14

அம்பேத்கர் மாணவர் விடுதியில் ராகிங் செயலில் ஈடுபட்டு வரும் சீனியர் மாணவர்கள் மீது நடவடிக்கை கோரி மாணவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கோவை, பாலசுந்தரம் சாலையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் அம்பேத்கர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகின்றது. இந்த விடுதியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இதில், தருமபுரி பகுதியைச் சேர்ந்த வெள்ளைய திருப்பதி என்ற மாணவர் தங்கி கோவைபுதூரில் செயல்பட்டு வரும் சிபிஎம் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் விடுதியில் சீனியர் மாணவர்கள் ரேகிங் செய்துவருவதாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "சீனியர் மாணவர்கள் தொடர்ந்து தன்னை ராகிங் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தினமும் சாப்பாடு வாங்கித் தர வற்புறுத்துகின்றனர். மேலும், அவர்களின் துணிகளை துவைக்கச் சொல்லி என்னைத் துன்புறுத்துகின்றனர். விடுதியில் பாதுகாவலர் இல்லாததால் யாரிடமும் சொல்ல முடியவில்லை. 

தருமபுரி மாவட்டத்தில் பின் தங்கிய பகுதியில் இருந்து படிக்கும் கனவுகளோடு வந்த தன்னை படிக்க விடாமல் தொடந்து துன்புறுத்துகின்றனர். விடுதியில் மாணவர் அல்லாத நபர்களும் தங்கி உள்ளனர். தற்போது அளித்துள்ள புகார் குறித்து காவல்துறையினர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இருப்பினும் விடுதிக்குச் செல்ல அச்சமாக உள்ளது."

இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...