ஆளுநரை கண்டித்து தபெதிக அமைப்பினர் முற்றுகை போராட்டம்


கோவை, நவம்பர் 15: கோவையில் தமிழக ஆளுநர் தலைமையில் கூட்டம் நடைபெறுவதை கண்டித்து தபெதிக அமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மாவட்ட அதிகாரிகளை சந்தித்து தமிழக ஆளுநர் உத்திரவு வழங்குவது மாநில உரிமைகளை பறிக்கின்ற நசுக்குகின்ற செயல் என அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்னயணன் குற்றம் சாட்டினார்.

புதுவையில் துணை நிலை ஆளுநரால் செய்யப்படும் செயலை தமிழகததில் ஆளுநர் பன்வாரிலால் துவங்கி வைத்து இருக்கின்றார் என்றும் தமிழக அமைச்சரவை செய்ய வேண்டியதை தற்போதை ஆளுநர் செய்கின்றார் எனவும் குற்றம்சாட்டினார்.

தமிழக அரசு பா.ஜ.கவின் பினாமி அரசாக, எடுபிடி அரசாக நடந்து வரும் நிலையில் கவர்னர் இந்த நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றார் எனவும், அதிமுக பெயரில் கட்சி வைத்து நடத்தி வரும் எடப்பாடி பழனிச்சாமி இதை எப்படி அனுமதித்தார் எனவும் கேள்வி எழுப்பிய கு.ராமகிருஷ்ணன், அண்ணாவின் கொள்கைகளை அதிமுக குழி தோண்டி புதைத்து வருகின்றது எனவும், ஆளுநரின் நடவடிக்கை மாநில உரிமைகளை பறிக்கும் செயல் எனவும் இதை தபெதிக அனுமதிக்காத எனவும், சுதந்திரத்திற்கு பின்னர் எந்த ஒரு ஆளுநரும் செய்யாத நிகழ்வை தற்போதைய ஆளுநர் செய்கின்றார் எனவும் குற்றம்சாட்டினார். 

இதனையடுத்து போராட்டம் நடத்தி தபெதிக அமைப்பினரை காவல் துறையினர் குண்டுகட்டாக கைது செய்து அழைத்து சென்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...