நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டி, தமிழக ஆளுநரிடம் மனு

கோவை, நவம்பர் 15: நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் அவற்றில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, கோவை வந்துள்ள தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் நேற்று நேரில் சந்தித்து, மனு அளித்தனர்.

இம்மனுவில், நீர்நிலைகள் மற்றும் அதன் வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, வருங்காலத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாப்பதற்காக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளால் அவற்றை கண்காணிப்பது , ஏரி மற்றும் குளங்கள் போன்றவற்றில் வாழும் உயிரினங்களை பாதிக்காதவாறு அவற்றை பராமரித்தல், பொதுப்பணி துறைக்கு சரியான நிதியை ஒதுக்குவது மற்றும் நெடுஞ்சாலைத் துறையால் ஆக்கிரமிக்கப்பட்ட கோயம்புத்தூர் தடுப்பணையை மீட்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டதாக, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கினைப்பாளர் திரு. இரா. மணிகண்டன் தெரிவித்தார்.

மேலும், இந்த கோரிக்கைகள் மீது மாவட்ட ஆட்சியர் மூலமாக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என கவர்னர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...