பணிச்சுமை அதிகம் இருப்பதாக கூறி கோவை அரசு மருத்துவமனை செவிலியர்கள் டீன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கோவை, நவம்பர் 16: கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் தங்களுக்கு பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக கூறி இன்று காலை அம்மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். 900 செவிலியர்கள் பணியாற்ற வேண்டிய இந்த மருத்துவமனையில் 218 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், மருத்துவமனையில் செவிலியர்கள் போதுமான அளவில் இல்லை என்றும் முறையாக சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துவந்தது.

இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் சுமார் 100 மருத்துவ செவிலியர்கள் மருத்துவமனையில் உள்ள முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுக்கு பணிச்சுமை மிக அதிகமாக இருப்பதாகவும், செவிலியர்களுக்கான காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களை நியமிப்பதை தவிர்த்து நிரந்தரமாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் கூறி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, அங்கு வந்த மருத்துவமனை முதல்வர் P.அசோகன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

மருத்துவ செவிலியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறிது நேரம் தொய்வு ஏற்பட்டது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...