பணிச்சுமை அதிகம் இருப்பதாக கூறி கோவை அரசு மருத்துவமனை செவிலியர்கள் டீன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கோவை, நவம்பர் 16: கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் தங்களுக்கு பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக கூறி இன்று காலை அம்மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். 900 செவிலியர்கள் பணியாற்ற வேண்டிய இந்த மருத்துவமனையில் 218 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், மருத்துவமனையில் செவிலியர்கள் போதுமான அளவில் இல்லை என்றும் முறையாக சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துவந்தது.

இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் சுமார் 100 மருத்துவ செவிலியர்கள் மருத்துவமனையில் உள்ள முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுக்கு பணிச்சுமை மிக அதிகமாக இருப்பதாகவும், செவிலியர்களுக்கான காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களை நியமிப்பதை தவிர்த்து நிரந்தரமாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் கூறி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, அங்கு வந்த மருத்துவமனை முதல்வர் P.அசோகன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

மருத்துவ செவிலியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறிது நேரம் தொய்வு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...