காடம்பாறை மின் உற்பத்தி வட்டத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு நேர்காணலுக்கு அழைப்பு

கோவை, நவம்பர் 15

கோவை மாவட்டம் காடம்பாறை மின்உற்பத்தி வட்டத்தில் தொழில் பயிற்சிக்கு நேர்காணல் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் நா. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

காடம்பாறை மின் உற்பத்தி வட்டத்திற்குபட்ட அலுவலகங்களில் ஒரு வருட ஐ.டி.ஐ தொழில் பழகுநர் பயிற்சிக்கு வரைவாளர்கள் (சிவில்) (3 நபர்கள்) வயர்மேன்கள் மற்றும் எலக்ட்ரீசியன்கள் (8 நபர்கள்) தேர்வு செய்யப்பட உள்ளனர் இவர்களுக்கான நேர்காணல், கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள  காடம்பாறை மின் உற்பத்தி வட்டம், மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  

எனவே, தகுதியுள்ள நபர்கள் கல்வி சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், மாற்றுத் திறனாளி சான்றிதழ் மற்றும் இதரச் சான்றுகள் ஆகியவற்றின் உண்மை மற்றும் நகல் ஆவணங்களுடன் வரும் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏற்கனவே, தொழிற்பயிற்சி முடிந்து சான்று பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. இந்த தேர்ச்சி பெறும் தொழிற் பழகுனருக்கு மாதம் ரூ.7,709 வீதம் உதவி தொகை வழங்கப்படும் என காடம்பாறை மின் உற்பத்தி வட்டம், மேற்பார்வைப் பொறியாளர்  தெரிவித்துள்ளார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...