முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் கூடுதல் விழுக்காடு ஒதுக்கீடு செய்ய ஆளுநரிடம் மனு

கோவை, நவம்பர் 15

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் கூடுதல் விழுக்காடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்அவர்களிடம் மனு வழங்கப்பட்டது.

தங்களது கோரிக்கைகள் குறித்து முதமைச்சருக்கு  தெரிவித்து, தீர்வு காணப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உறுதி அளித்துள்ளதாக முன்னாள் ராணுவத்தினர் தெரிவித்தனர்.

திருப்பூர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், கோவை விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஆளுநரை, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவையர் நலச்சங்கத்தினர் சந்தித்தனர். காலை முதல் காத்திருந்தவர்கள் மாலை ஆளுநரை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை வழங்கினர். 



இதில், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் கூடுதல் விழுக்காடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்,60 வயதிற்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவர்களது மனைவிக்கும் அரசு பேருந்துகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், கோவை மலுமிச்சம்பட்டியில் நிறைவடைந்துள்ள தொகுப்பு வீடுகளை முன்னாள் ராணுவத்தினர் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்கள், முதலமைச்சர், அமைச்சர்கள் உட்பட அதிகாரிகளை சந்திக்கவே முடியாத சூழ்நிலையில் தங்களை நேரில் சந்தித்து ஆளுநர் மனுவை பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தப்படும் என ஆளுநர் உறுதி அளித்தாக தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...