அமைச்சர்கள் மீது லஞ்சம், ஊழல் புகார்கள் இருப்பதை உணர முடிகிறது - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

கோவை, நவம்பர் 15

தமிழக அமைச்சர்கள் மீது லஞ்ச ஊழல் புகார்கள் இருப்பதை பாஜகவினால் உணர முடிகிறது என அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை காந்திபுரம் அருகே திருவள்ளுவர் நகர் பகுதியில் பழுதடைந்த சாலையினை சீரமைக்கும் போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர். பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில், அக்கட்சியினர் சிமெண்ட் கலவையை கொண்டு சாலையை சரி செய்தனர். 



அப்போது, வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் சாலை பாரமரிப்பு பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. மக்களின் அடிப்படை பிரச்சனைகளான சாலை வசதி, குடிநீர் பிரச்சணைகளில் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். 

ஸ்மார்ட் சிட்டி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு ஒதுக்கும் நிதி முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிறைந்து இருக்கிறது. மேலும், தமிழக அமைச்சர்கள் மீது லஞ்ச, ஊழல் புகார்கள் இருப்பதை பாஜகவினால் உணர முடிகிறது. ஊழலால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...