ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத்துடன் பிஎஸ்ஜி கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை, நவம்பர் 16

கோவையில் உள்ள பிஎஸ்ஜி கல்வி நிறுவனம் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த கிளஸ்கோ கலிடோனியன் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. 

இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் முன்னணிக் கல்வி நிறுவனமாக ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிளஸ்கோ கலிடோனியன் பல்கலைக்கழகம் திகழ்ந்து வருகிறது. இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கான பயிற்சி மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு என பலதுறைகளில் இந்தப் பல்கலைக்கழகம் தீவிரம் காட்டி வருகிறது. லண்டன், ஓமன், வங்கதேசம் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் இதன் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் பிஎஸ்ஜி கல்விக்குழுமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கிளஸ்கோ கலிடோனியன் பல்கலைக்கழகத்தில் 2 வார கால பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். 

இதன் ஒருபகுதியாக, கிளஸ்கோ கலிடோனியன் பல்கலைக்கழகமானது, கோவையில் இயங்கி வரும் பிஎஸ்ஜி கல்வி நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம். அதன்படி, மாணவர்களுக்கு கல்வி பயிலும் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது, இரு கல்வி நிறுவனங்களுக்கு இடையே ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து கொள்வது,  ஜவுளி, ஃபேஷன், உயிரியல் மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவைகளில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரு தரப்பினரிடையே சர்வதேச அளவில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டுத் திட்டங்களை செயல்படுத்துகிறது. இரு கல்வி நிறுவனங்களிடையிலான ஒப்பந்தத்தில் கிளஸ்கோ கலிடோனியன் பல்கலைக்கழகத்தின் துணை முதல்வரும், பிஎஸ்ஜி கல்லூரியை பார்வையிட வந்த 4 பேர் கொண்டக் குழுவின் தலைவருமான ஜீனைன் கிரிகெர்சன் - ஹெர்மன்ஸும், பிஎஸ்ஜி சார்பில் அதன் இயக்குநர் பி. ராதாகிருஷ்ணன் கையெழுத்திட்டனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...