இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - இந்திய அணி தடுமாற்றம்

நவம்பர் 16

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில், முன்னணி வீரர்களின் விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி தடுமாறியது. 

இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. காலை முதலே அவ்வப்போது மழை பெய்ததால், மைதானம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. இதனால், முதல் நாள் ஆட்டம் 4 மணி நேரம் தாமதமாக துவங்கியது.

டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமால் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷமி, உமேஷ், புவனேஷ்வர் என 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் அஷ்வின், ஜடேஜா இடம் பிடித்தனர்.

தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் தவான் களமிறங்கினர். போட்டித் தொடங்கியது முதலே இந்திய அணி வீரர்களுக்கு லக்மல் கடும் சவாலாக விளங்கினார். இவர் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் டக்-அவுட்டானார். தவானை 8 ரன்னிலும், கேப்டன் கோலியை ரன் எதுவும் எடுக்கவிடாமல் லக்மல் அவுட்டாக்கினார். 

இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 17 ரன்கள் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்னரே முடிவுக்கு வந்தது. புஜாரா (8), ரகானே (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...