டெங்கு காய்ச்சலுக்கு கோவையைச் சேர்ந்த வாலிபர் பலி

கோவை, நவம்பர்.16

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வாலிபர் பலியான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மரக்கடையை அடுத்த சந்திரன் வீதி பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர். இவரது மகன்   இப்ராகிம் (32). 

காய்ச்சல் காரணமாக இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அங்கு தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இப்ராகிம்-ஐ அவரது உறவினர்கள் தன்னிச்சையாக வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. 

இந்த சூழலில், இன்று காலை அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த இப்ராகிம்-ன் குடும்பத்தார் அவரை ம மீண்டும்  அதிகாலை 5 மணிக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு மீண்டு அழைத்து வந்தனர். 

அங்கு மருத்துவர்கள்  சிகிச்சை அளிக்க தொடங்கிய சிறிது நேரத்திலே இப்ராகிம்  உயிரிழந்தார். 

கோவையில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்போர் எண்ணிக்கை சற்றே ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் பலியாகியிருப்பது பொதுமக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...