காவல்துறை குறைதீர்ப்பு முகாமில் 1,242 போலீசார் பங்கேற்பு


கோவை, நவம்பர் 18: மேற்குமண்டல காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.



தமிழக காவல்துறை இயக்குனர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த குறைதீர்ப்பு முகாமில் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய எட்டு மாவட்டங்கள் மற்றும் சிறப்பு காவல்படையை சேர்ந்த 1,242 போலீசார் கலந்து கொண்டனர். இவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி டி.ஜி.பி.யிடம் அளித்தனர்.



மனுக்களில், இடமாறுதல், பதவி உயர்வு, வழங்கப்பட்ட தண்டனைகளில் இருந்து நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

இந்த குறைதீர்ப்பு முகாமிற்கு கோவையில் இருந்து மட்டும் 510 போலீசார் கலந்து கொண்டனர். மேலும், திருப்பூரில் இருந்து 210 பேரும், நீலகிரியில் இருந்து 110 காவலர்களும் கலந்து கொண்டு மனு அளித்தனர்.



மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி. ராஜேந்திந்திரன் தெரிவித்தார்.



இந்த முகாமில் கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா மற்றும் மேற்குமண்டல காவல்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...