கோவை என்னை வளர்த்த ஊர் - புதிய காவல் ஆணையர் நெகிழ்ச்சி பேட்டி

கோவை, நவம்பர் 18: கோவை மாநகரின் 27-வது காவல் ஆணையராக K.பெரியய்யா பதவியேற்றுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த K.பெரிய்யா கடந்த 1982-ம் ஆண்டு தொடங்கி 1988-ம் ஆண்டு வரை கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயின்றார். 

அப்போது, கல்லூரியின் ஹாக்கி அணியின் கேப்டனாக பதவி வகித்தார். அதோடு, கோவை மாவட்ட கால்பந்து அணியிலும் விளையாடியுள்ளார்.

தொடர்ந்து, கடந்த 1989-ம் ஆண்டு காவல் துறையில் டி.எஸ்.பி. ஆக பணிக்குச் சேர்ந்த அவர் 1997-ல் ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றார். 

இதனை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய அவர், சென்னை பெருநகர கூடுதல் ஆணையராக (போக்குவரத்து) பணி புரிந்து வந்தார்.

அவர் இன்று காலை கோவை மாநகர காவல் ஆணையராக பதவியேற்றுக்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நான் கோவையை நன்கு அறிந்தவன். கல்லூரிப் படிப்பை இங்கு தான் முடித்துள்ளேன். கோவை என்னை வளர்த்தெடுத்த ஊர். இந்த ஊரின் அமைதிக்கு பல்வேறு திட்டங்களை வகுப்பேன்.



மாநகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்ற சம்பவங்களை குறைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதோடு, பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, மாநகராட்சி மற்றும் அரசுத் துறைகளுடன் இணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

காவல்துறையின் நற்செயல்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...