அமைச்சர்களை விமர்சனம் செய்வதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும் - அமைச்சர் செல்லூர் ராஜு

தமிழக அமைச்சர்களை கேவலமாக பேசுவதை எதிர் கட்சித்தலைவர் ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கோவையில் நடந்த கூட்டுறவு வாரவிழா நிகழ்ச்சியில் வலியுறுத்தினார்.

கோவையில் மாநில அளவிலான 64 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாடைபெற்றது.இந்த விழாவில் ஊரக வளர்ச்சி் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சிறப்பாக நடத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.

எதிர்கட்சியினரின் எழுப்பும் கேள்விகளுக்கு புள்ளி விபரங்களுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்து வருகிறார் என தெரிவித்தவர், பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் முட்டையே போடபடுவதில்லை என எதிர்கட்சிதலைவர் சொல்வது தவறு எனவும் பள்ளிகளில் முறையாக முட்டை போடப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.கோவை மாவட்டத்திற்கு தேவையான கோரிக்கைகள் முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் வரும் 3ம் தேதி கோவையில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் திட்டங்களை அறிவிக்க இருக்கின்றார் என தெரிவித்தார்.மேலும் திமுக ஆட்சியின் போது மழை காலங்களில் சென்னையில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது எனவும்,தற்போதய அதிமுக ஆட்சியில் மழை பெய்தால் உடனடியாக தண்ணீர் வெளியேற்ற படுகிறது அந்தளவு பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றது என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் கூட்டுறவு துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை பட்டியலிட்டார். பின்னர் பேசிய அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டு சென்ற பணியை விவசாய பிரதிநிதியாக இருந்து செய்து கொண்டு வருகிறேன் எனவும்,தமிழகத்திலேயே ஒரே துறையில் ஏழு ஆண்டுகள் வரை பணியாற்றிய ஒரே அமைச்சர் நான் மட்டும் தான் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தான் திமுக அரசு என குற்றம் சாட்டியவர் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அதிமுக ஆட்சி குறித்து தவறாக பேசுகிறார் எனவும், ஸ்டாலின் ஒரே ஒரு குளத்தை தூர்வாரி விட்டால் அனைத்து குளத்திலும் நீர்மட்டம் ஏறி விடுமா என கேள்வி எழுப்பினார். இந்த அரசை தரக்குறைவாக தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசிகின்றார் எனவும், திமுக தலைவர் கருணாநிதி தான் ஊழலையே அறிமுகப்படுத்தியவர் என்றவர் 2ஜி வழக்கில் சிக்கியவர்தான் கனிமொழி எனவும் தெரிவித்தார். ஸ்டாலின் என்ன மக்கள் சேவகரா? என கேள்வி எழுப்பியவர், நமக்கு நாமே பயணம் என கூறி மக்களை ஸ்டாலின் ஏமாற்றுவதாகவும் தெரிவித்தார்.

தமிழக அமைச்சர்களை ஸ்டாலின் கேவலமாக பேசுவதாக குற்றம்சாட்டிய அமைச்சர் செல்லூர்ராஜூ, அமைச்சர்களை இப்படி பேசுவதை ஸ்டாலின் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மேலும், ஆட்சியில் தவறு இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்ள தயாராக இருக்கின்றோம் என தெரிவித்த அமைச்சர் மக்கள் தான் தங்களுக்கு எஜமானர்கள் என தெரிவித்தார்.

பள்ளிகளில் முட்டை போடவில்லை என தவறான தகவலை ஸ்டாலின் சொல்கின்றார் எனவும் தங்கள் பாதை தெளிவானது எனவும், 2023 விஷன் திட்டப்படி அடுத்த முறையும் அதிமுக ஆட்சி கண்டிப்பாக தமிழகத்தில் அமையும் என செல்லூர் ராஜூ தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேட்டியளித்தவர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் தங்களுக்கு கோவில் போன்றது எனவும்,அங்கு வருமான வரித்துறை சோதனை நடத்தியது வருத்தம் அளிக்கின்றது எனவும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...