இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பு சார்பில் கோவையில் வரும் 27-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கோவை, நவம்பர் 22

பிரதம மந்திரி கவுசல் விகாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் 43 நாட்கள் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மத்திய தொழில்முனைவோர் மற்றும் மேம்பாட்டுத்துறையின் (எம்.எஸ்.டி.இ) சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுச் செயல்பட்டு வரும் இந்தப் பயிற்சி வகுப்பிற்குக் குறைந்தபட்சம் 5-வது படித்திருந்தால் போதுமானது. தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படுகிறது.

நாட்டில் உள்ள மிகப்பெரிய ஜவுளித் தொழில் சங்கங்களில் இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பு முக்கியமானதாகும். இந்த அமைப்பானது, ஜவுளித்துறையில் பல்வேறு விதமான தொழில் போட்டிகளை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டம் அவினாசி சாலையில் உள்ள சித்ரா பகுதியில் வரும் 27-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. பிரதம மந்திரி கவுசல் விகாஷ் யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பு உறுப்பினர்களின் நிறுவனங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக ஜவுளித் தொழில்துறையில் ஆள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனைப் போக்கும் நடவடிக்கையாக, இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பு மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, முன் அனுபவமில்லாத 50,000 பேருக்கு, இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தின்கீழ் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...