மலையாள நடிகை கடத்தப்பட்ட வழக்கு : நீதிமன்றத்தில் துணைக் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது போலீஸ்

நவம்பர் 22

மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட வழக்கில்  அங்கமாலி நீதிமன்றத்தில் துணைக் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். 

கேரளாவில் கடந்த பிப்ரவரி 17-ந்தேதி நடிகை பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில், அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.  இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றபத்திரிகையில் திலீப் 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டடிருந்தார்.  முதல் குற்றவாளியாக சுனில் என்கிற பல்சர் சுனில் இருந்தார். 

இந்த நிலையில், நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட வழக்கில் துணைக் குற்றப்பத்திரிகையை இன்று அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். இதில் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், திலீப்பின்   முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார். இந்தக் குற்றப்பத்திரிகையில் திலீப் உள்பட 14 குற்றவாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். 385 சாட்சிகள் மற்றும் 12 ரகசிய அறிக்கைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. 50 சினிமா உலக பிரமுகர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கில் பல்சர் சுனில், விஜேஷ், மணிகண்டன், வடிவாள் சலீம், மார்ட்டீன், பிரதீப், சார்லி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...