கந்துவட்டி பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் - நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தல்

கோவை, நவம்பர் 23:

கந்துவட்டி பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது. இச்சம்பவம் தமிழ் திரையுலகின் நிலைமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. கந்து வட்டியினால் ஏராளமான தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கந்துவட்டி பிரச்சனைக்கு தீர்வுகாண அரசு தலையிட வேண்டும். கந்துவட்டி உள்ளிட்ட பிரச்சனைகளை தயாரிப்பாளர்கள் சங்கம் மூலமாக பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்போம். என்றார். 

தொடர்ந்து, பத்மாவதி திரைப்படம் தொடர்பாக நடிகை தீபிகா படுகோனேவின் தலைக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், எவ்வளவு மோசமான நாட்டில் வாழ்கிறோம் என்பதை இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது. பல மொழி, கலாச்சாரம் உள்ள ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சியினரே மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மாற்றம் வேண்டுமென அரசியலுக்கு வருவது தவறல்ல. நடிகர் கமல்ஹாசன் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே தவிர, குற்றச்சாட்டே கூறக்கூடாது என மிரட்டக்கூடாது. நான் அரசியலுக்கு வரமாட்டேன். குடிமகனாக வாழவே ஆசைப்படுகிறேன். இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்தார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...