சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை - தினகரன் குற்றச்சாட்டு

நவம்பர் 23

இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படவில்லை என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றும் அவர் கூறினார்.

இரட்டை இலைச்சின்னம் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., அணியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓ.பன்னீர்செல்வம் அணியில், 12 எம்எல்ஏக்கள் இருந்த போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. அப்போது, சாதிக் அலி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை. ஆனால், இப்போது அந்த தீர்ப்பை பின்பற்றியுள்ளனர். எனவே, தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என்பது இந்திய மககள் அனைவருக்கும் தெரியும். 

தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர், குஜராத் மாநில தலைமை செயலாளராக பணியாற்றியவர். சாதிக் அலி வழக்கு, அதிமுகவிற்கு பொருந்தாது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். தேர்தல் ஆணையம், மத்திய அரசின் விருப்பத்தின் பெயரில் செயல்பட்டு வருகிறது என்பது நிருபணமாகி உள்ளது. 

இதில், மத்திய அரசின் தலையீடு உள்ளது. 99 சதவீத தொண்டர்களும், தமிழக மக்களும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். தற்போது, இரட்டை இலை சின்னம், குரங்குகள் கையில் சிக்கிய பூமாலையாக உள்ளது. அதை மீட்போம். தேர்தல் ஆணையம் தீர்ப்பு மூலம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, 111 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது நிருபணமாகி உள்ளது. அவரது ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை. ஆர்கே நகர் தேர்தலில் நான் தான் மீண்டும் போட்டியிடுவேன். வெற்றி பெற்று, இரட்டை இலையை மீட்பேன். தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைமை திரிசங்கு சொர்க்கம் போல உள்ளது. இவ்வாறு தினகரன் கூறினார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...