குலுக்கல் முறையில் பரிசுகள் அறிவித்து ஏமாற்றும் நிறுவனங்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

கோவை, நவம்பர் 24

மக்களை ஏமாற்றும் நோக்குடன் திருவிழா காலங்களில் பரிசுக் குலுக்கல் அறிவிக்கும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என்.ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் தீபாவளி, கிருஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட திருவிழா காலங்களில் வணிக நிறுவனங்கள் தங்களின் சுய இலாபத்திற்காக பரிசுக் குலுக்கல் என்ற திட்டத்தின் மூலம் அவர்கள் விற்பனை செய்யும் பொருட்களின் விலையைக் கூட்டி தரமற்ற பொருட்களை விற்பதாகவும், அளவு குறைப்பு, கலப்படப் பொருட்கள், பழைய இருப்பு பொருட்கள் விற்பனை செய்து வருவதாகப் புகார்கள் வருகின்றன. வணிகர்களின் இத்தகைய செயல்களினால் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுகின்றனர். 

பொதுமக்களும், நுகர்வோர்களும் இதுபோன்று பரிசுக் குலுக்கல் திட்டத்தினை அறிவிக்கும் வணிக நிறுவனங்களின் விளம்பரங்களைத் தவிர்க்க வேண்டும்.

மேலும், பொதுமக்களை ஏமாற்றும் நோக்குடன் இதுபோன்று பரிசுக் குலுக்கல் திட்டங்களை அறிவித்து விளம்பரங்களை வெளியிடும் வணிக நிறுவனங்கள் மீது பரிசு குலுக்கல் (தடை) சட்டம் 1955, பரிசு கொண்ட சீட்டுத் திட்டங்கள் மற்றும் பண சுழற்சித் திட்டங்கள் (தடை) சட்டம் 1978 மற்றும் தமிழ்நாடு பரிசுத் திட்டங்கள் (தடை) சட்டம் 1979 ஆகியவற்றின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...