ஆதிதிராவிடர்களுக்கான தாட்கோ திட்டங்களில் பயன்பெறுவோரின் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை, நவம்பர் 24 

தாட்கோ திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் ஆதிதிராவிட இனத்தவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்படுத்துதல், துரித மின் இணைப்புத் திட்டம், தொழில்முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருத்துவமனை அமைத்தல், மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முடநீக்கு மையம், ரத்தப் பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி மற்றும் பொருளாதார கடனுதவி உள்ளிட்ட திட்டங்களுக்கு வயது வரம்பு 18 முதல் 65 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

மேலும், மானியத் திட்டத் தொகையில் 50 %, மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டம், மேலாண்மை இயக்குநரின் விருப்புரிமை நிதியதவி, இந்தியக் குடிமைப் பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்டப்பட்டதாரிகளுக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி -1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, பட்டயக்கணக்கர்/ செலவுக்கணக்கர்/ நிறுவன செயலர்களுக்கு நிதியுதவி போன்ற பல்வேறு திட்டங்களுக்கு குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சம் வரை உள்ளவர்களும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க விரும்புவோர் http://application.tahdco.com என்ற இணையதள முகவரிக்குச் சென்று விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும்போது குடும்ப அட்டை எண் அல்லது இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று, கல்வித்தகுதி மற்றும் வயதிற்கான ஆதார சான்றிற்கு (பள்ளி மாற்றுச் சான்று/ வாக்காளர் அடையாள அட்டை/ ஓட்டுநர் உரிமம்/ பான் கார்டு/ ஆதார் அட்டை/ மதிப்பெண் சான்று) இவற்றில் ஏதாவது ஒன்றையும் மற்றும் திட்டத்திற்கான TIN எண் உள்ள நிறுவனத்திடமிருந்து பெற்ற விலைப்புள்ளி திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதி ஆகியவற்றை அதற்கான இடத்தில் குறிப்பிட்டு புகைப்படத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். 

நிலம் வாங்கும் திட்டத்திற்கு மூலப்பத்திரம், விற்பனை உடன்படிக்கை பத்திரம், வில்லங்க சான்று சர்வே எண், சிட்டா அடங்கல், நில பத்திரம் மற்றும் நிலம் விற்பவரது சாதி சான்று விபரங்களைப் பதிவு செய்து ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். 

தகுதி வாய்ந்த ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மூலம் பயனடைய மேற்குறிப்பிட்ட ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், விபரங்கள் பெற மாவட்ட மேலாளர், தாட்கோ, டாக்டர். பாலசுந்தரம் சாலை அலுவலகத்தை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...