இளைஞரை காவு வாங்கிய எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா நுழைவுவாயில் : முறையான அனுமதி பெறவில்லை என அதிகாரிகள் குற்றச்சாட்டு

கோவை, நவம்பர் 25  

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கோவையில் வைக்கப்பட்ட நுழைவு வாயில் இளைஞர் ஒருவரை பலி வாங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக அரசு சார்பில் வரும் டிசம்பர் 3 - ம் தேதி கோவை வ.ஊ.சி   மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். விழாவுக்கான முன்னேற்பாடுகள் தற்போதே தொடங்கிவிட்ட நிலையில் அவினாசி சாலையில் விமான நிலையம் தொடங்கி வ.ஊ.சி மைதானம் வரை அலங்கார நுழைவு வாயில்கள் அமைக்கும்  பணியில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். 



இதில் ஒரு அலங்கார நுழைவு வாயிலை ஹோப் காலேஜ் அருகில் அக்கட்சியினர் அமைத்தனர். 

இந்த நுழைவுவாயில் அமைப்பதற்காக அவினாசி சாலையின் ஒரு பகுதி தோண்டப்பட்டுள்ளது. 6 வழிச்சாலையான அவினாசி சாலையின் 2 பாதைகளை இந்த நுழைவு வாயில் ஆக்கிரமித்துள்ளது. . 

கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் ரகுபதி. அமெரிக்காவில் பணிபுரியும் இவர் திருமணத்திற்கு பெண் பார்பதற்காக சமீபத்தில் கோவை வந்துள்ளார்.  நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் ஹோப்ஸ் பகுதியில் இருந்து சின்னியம்பாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். 

இரவு நேரம் என்பதால் சாலையை ஆக்கிரமித்து நுழைவு வாயில் அமைத்தது அவர் கண்ணிற்கு தென்படவில்லை. இதனால், எதிர்பாராத விதமாக அந்த அலங்கார நுழைவு வாயிலில் மோதிய ரகுபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 



உயிரை பலி கொடுத்து அரசு விழா நடத்த வேண்டுமா? அதிகாரிகளுக்கும், ஆளும் கட்சியினருக்கும் பொறுப்புணர்ச்சி இல்லாமல் அலங்கார நுழைவுவாயில் அமைத்ததே விபத்துக்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் பலர் குற்றம் சாட்டிய நிலையில், விபத்துக்கு காரணமான அலங்கார நுழைவு வாயில் உடனடியாக அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையர் K.விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

மேலும், நுழைவு வாயில் வைப்பதற்கு மாநகராட்சியிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்ற பகீர் தகவலையும் அவர் வெளிட்டுள்ளார். 

இந்த சூழ்நிலையில், ஆளும் கட்சியாகின் எந்த அதிகாரிகளிடமும் முன் அனுமதி பெறாமல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற முனைப்பு அ.தி.மு.க. வினரிடையே இருக்கும் வரை தமிழகத்தில் இது போன்ற உயிர்பலிகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்று பொதுமகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...