திருப்பூர் அருகே ஒடும் ரயிலில் தீ விபத்து தவிர்ப்பு

திருப்பூர், நவம்பர் 28

கோவையில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி நோக்கி சென்றுகொண்டிருந்த ஓடும் ரயில் இன்ஜினில் திடீரென பயங்கர புகை கிளம்பியதால் பயணிகள் அதிர்ச்சி.

இந்த விபத்தில் ஓட்டுனர் ரயிலை ஈரோடு அருகே ரங்கம்பாளையத்தில் சாமர்த்தியமாக் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இன்று காலை கோவையில் இருந்து திருப்பதி நோக்கி புறப்பட்ட ரயில் காலை சுமார் 7.15 மணி அளவில் திருப்பூர் தாண்டி சென்றுகொண்டிருந்தது ..அதன்பின்னர் ரயில் ஈரோடு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது இன் ஜின் பகுதியில் இருந்து திடீரென் கடும்புகை கிளம்பிய அடுத்தத்துள்ள ரயில் பெட்டிகளில் பரவ ஆரம்பித்தது. 

இதனை கண்ட பயணிகள் கடும் அச்சத்தில் உறைந்தனர். நேரம் ஆக ஆக புகை தாக்கம் அதிகரிக்கவே இதனை கண்ட ஓட்டுனர் ரயிலை ஈரோடு அருகே ரங்கம்பாளையத்தில் சாமர்த்தியமாக் நிறுத்தினார். 

பின்னர் ரயில் சக்கரத்தில் இருந்து கிளம்பிய புகையை தீயணைப்பு கருவியை பயன்படுத்தி கட்டுப்படுத்தினார். இதனால் பெரும் தீவிபத்து தடுக்கப்பட்டதோடு பயணிகள் உயிர் தப்பினர். 

சுமார் 15 நிமிடம் தாமதமாக.ரயில் கிளம்பியது. இச்சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...