தொடர் கொலையில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கோவை, நவம்பர் 29

ஒரே இரவில் மூன்றுபேரைக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம், காரமடை அருகே புங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். சென்ட்ரிங் தொழிலாளியான இவர் குடும்ப வறுமையின் காரணமாக 2013 மார்ச் 28ம் தேதியன்று உறவினர் ஆனந்தகுமார் உடன் மது அருந்திவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இவரது நண்பரான வேலுசாமியிடம் (49) ஸ்ரீதர் செலவிற்கு பணம் கேட்டுள்ளார். வேலுசாமி பணம் தர மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் தான் வைத்திருந்த கத்தியால் குத்தி அவரை கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாயினை திருடி விட்டு தப்பினார்.

பின்னர் காரமடை கண்ணார்பாளையம் பிரிவு அருகே வந்த ஸ்ரீதர் அங்குள்ள பெட்டிக்கடையை உடைத்து பணம் திருட முயற்சித்த நிலையில், அதைக்கண்ட தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் காவலாளி ராஜேந்திரன் சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்கிற மாரியப்பன் இருவரின் சண்டையை விலக்க முயன்றுள்ளார். அப்போது அவரையும் ஸ்ரீதர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

தொடர்ந்து அங்கிருந்து காரமடை ரயில் நிலையம் அருகே சென்ற அவர் சாலையோரமாக இருந்த குடிசைக்குள் தலைமறைவாக முயற்சித்த நிலையில் குடிசைக்குள் இருந்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சேகர் கூச்சலிட்டுள்ளார். அவரையும் ஸ்ரீதர் கத்தியால் குத்தி கொலைசெய்துவிட்டு தப்பினார்.

ஒரே நாள் இரவில் மூன்று பேரை கொலை செய்த இச்சம்பவம், காரமடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் வேலுசாமி கொலை வழக்கு கோவை 5-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும், சேகர் மற்றும் ரமேஷ் கொலை வழக்கு தனித்தனியாக 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது.

இதில், ரமேஷ் கொலை வழக்கின் இறுதிகட்ட விசாரணை நீதிபதி விஜயா முன்னிலையில் நடந்தது. விசாரணையின் இறுதியில் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...