ஆர்.கே. நகர் தொகுதி அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிப்பு

நவம்பர் 30 

ஆர்.கே. நகர் தொகுதி அதிமுக வேட்பாளராக மதுசூதனன் ஆட்சி மன்ற குழுவால் ஒருமனதாகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

வரும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 28 பேர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். அதிமுக அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன், முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச்செயலாளர் தமிழ் மகன் உசேன், தென்சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் ஆதிராஜாராம், வடசென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், 42-வது வார்டு முன்னாள் உறுப்பினர் அஞ்சுலட்சுமி, 1996-ல் ஆர்.கே.நகரில் போட்டியிட்ட ஆர்.எம்.டி.ரவீந்திரஜெயன், 2016 தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட நூர்ஜகான் உள்ளிட்டோரும் மனு கொடுத்துள்ளனர். 

இதனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக நிர்வாகிகளிடம் கடும் போட்டி ஏற்பட்டு நிலவியது. எனவே, வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்காகச் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, வேலுமணி மற்றும் மதுசூதனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆட்சிமன்றக் குழுவை சேர்ந்த 8 பேர் கலந்து கொண்டுள்ளனர். ஜஸ்டின் செல்வராஜ் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தில் ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசித்தனர். 

சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த ஆலோசனையில் மதுசூதனன் ஆட்சிமன்றக் குழுவால், ஆர்.கே. நகர் வேட்பாளராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆர்.கே.நகர் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டசபை தொகுதியை அதிமுகவின் கோட்டை என்றே கூறலாம். இதுவரை அங்கு நடைபெற்ற 9 சட்டசபை தேர்தல்களில் 5 முறை அதிமுக வெற்றி பெற்று உள்ளது. திமுகவும், காங்கிரசும் தலா இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளன. அதிலும், கடந்த மூன்று சட்டசபை தேர்தல்களிலும் அதிமுகவே தொடர்ச்சியாக வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...