சின்னியம்பாளையம் பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை ஆய்வு செய்த வைகோ

கோவை, டிசம்பர் 1

சின்னியம்பாளையம் பகுதியில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 10 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று ஆய்வு செய்தார்.

கோவையில் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கத்தின் போது பல ஆயிரம் மரங்கள் அகற்றப்பட்டன. அந்த மரங்களுக்கு மாற்றாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், சட்டவிதியை பின்பற்றாமல் நெடுஞ்சாலைத் துறையினர் போலியாக மரக்கன்றுகள் வைத்து பராமரிப்பதாக கணக்கு காட்டியதைத் தொடர்ந்து உயர்நீதி மன்றத்தில் மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் வழக்கு தொடர்ந்தார்.

இதன் விளைவாக சின்னியம்பாளையம் அருகில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அந்த மரக்கன்றுகள் ஐந்து அடி முதல் 10 அடிகள் வரை நன்றாக வளர்ந்துள்ளன.

இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருப்பூர் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பின் கோவை வரும் வழியில் சின்னியம்பாளையத்தில் உள்ள மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்நிகழ்வின் போது மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார், அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...