கோவையில் முதல்முறையாக குழந்தையின்மை சிகிச்சைக்கு (IMSI) இம்சி சிகிச்சை முறை அறிமுகம்

கோவை, டிசம்பர் 1

சுதா கருத்தரித்தல் மையம் கோவையில் கடந்த எழு ஆண்டு காலமும், ஈரோட்டில் இருபத்தி எட்டு ஆண்டு காலமும் செயல்பட்டு வருகிறது. குழந்தையில்லா தம்பதியினருக்கு குழந்தை பிறக்க (IMSI) இம்சி என்கின்ற அதி நவீன சிகிச்சை முறையை கோவையில் முதல் முறையாக இவ்மையம் கடந்த ஜனவரி மாதம் அறிமுகம்படுத்தியுள்ளது.

இலங்கயை சேர்ந்த நிரோஷா(35) பிரேமதிலகே(45) தம்பதியினர் குழந்தையின்மை சிகிச்சைக்காக இவ்மையத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அணுகியுள்ளனர். அவர்களுக்கு இம்சி சிகிச்சை முறை மூலம் தற்போது குழந்தை பிறந்துள்ளது.



இதுக்குறித்து இவ்மையத்தின் தலைமை மருத்துவர் தனபாக்கியம் கூறுகையில், ”இந்த அதிநவீன சிகிச்சை முறை கோவையில் முதல்முறையாக அறிமுகம்படுத்தியுள்ளோம். இதன் மூலம் பல நாடுகளில் மேற்கொள்ளப்படும் அதிநவீன சிகிச்சை முறை கோவையிலும் மேற்கொள்ளப்படும். குழந்தையில்லா தம்பதியினர் இந்த சிகிச்சையின் மூலம் எளிதில் பயனடைய முடியும்.

இம்சி சிகிச்சை முறை மூலம் ஆண் விந்துவை 6500 மடங்கு உருப்பெருக்கி காட்டப்பட்டு விந்துவில் உள்ள குறைகளை நிக்கி வீரியமான மற்றும் தரமான விந்துவை பெண்ணின் கருமுட்டையில் உட்செலுத்தி குழந்தை உருவாக்க முடியும்,” என்றார்.

இந்த சிகிச்சை முறைக்கு தற்போது சிகிச்சையிக்கு ஆகும் செலவை விட கூடுதலாக ரூபாய் 25000 செலவாகும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் இதை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தற்போது குழந்தையின்மை அதிகரித்து வருவதற்கு காரணம் மக்களின் வாழ்வு முறையும், உணவு பழக்க வழக்கங்கள் தான் காரணம் என்றும் அவர் கூறினார்.

அதே போல் “ஆண்கள் தங்களது செல்போன்களை மேல் சட்டையில் வைக்க வேண்டும் எனவும் மடிகணினியை மடியில் வைத்து பயன்படுத்தவும் கூடாது,” எனவும் அவர் அறிவுரை வழங்கினார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...