விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்கள் குறித்து வழக்கு தொடரப்படும்- எம்.எல்.ஏ கார்த்திக்


கோவை, டிசம்பர் 3

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்கள் விதிமுறைக்கு மீறி வைக்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ந. கார்த்திக் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

கோவையில் இன்று நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக விதிமுறையை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த நவம்பர் 30-ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக-வால் வழக்கு தொடரப்பட்டது. இதில், உயர் நீதிமன்ற நீதிபதிகள்போக்குவரத்து மற்றும் மக்களுக்கு இடையூறாக இருக்கும் கட் அவுட் மற்றும் பேனர்களை அகற்ற ஆணையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து மீண்டும் அனுமதியின்றி புதிதாக வைக்கப்பட்டுள்ள கட் அவுட் மற்றும் பேனர்களை அகற்ற உயர் நீதிமன்ற ஆணையின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் திமுக-வினர் மனு அளித்தனர். இருப்பினும், அதிமுக நிர்வாகிகளால் கோவையில் ஆயிரக்கணக்கான பேனர்கள் மற்றும் கட் அவுட்கள் 10 அடி முதல் 30 அடி உயரத்தில் விதிமுறைகளுக்கு மாறாக வைக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற ஆணையை மதிக்காமல் வைக்கப்படும் கட் அவுட்கள், பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை மீது நீதிமன்ற வழக்கு முழு ஆதாரத்துடன் பதியப்படும்.

மேலும், கோவை அண்ணா சிலை அருகே புதிதாக ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சிலை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி வைத்திருக்கிறார்களா? இல்லையா? என்பது குறித்து ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...