80 கோடி மோசடி வழக்கை போலீசார் விசாரிக்க தடை


திருப்பூர், டிசம்பர் 6

திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் ரூபாய் 80 கோடி மோசடி செய்ததாக கணவன் மனைவி உட்பட 6 பேர் மீது திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரை அடுத்த  ஆண்டிபாளையம் வரத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் . இவர் கடந்த நவம்பர் மாதம் தனக்கு தெரியாமல் தான் பங்குதாரராக உள்ள நிறுவனத்தின் பெயரில் நிறுவனத்தை துவங்கி துரைசாமி,  அவரது மனைவி தனலட்சுமி மற்றும் மருமகன்கள் மகேக்ஷ், சண்முக வடிவேல், மேலாளர்களான ராமராஜ்,கண்ணன் ஆகியோர் ரூபாய் 80 கோடி மோசடி செய்ததாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய திருப்பூர் மத்திய பொருளாதார குற்றபிரிவு போலீசாருக்கு உத்தரவுட்டிருந்தது. இதனிடையே நீதிமன்ற உத்தரவின் பேரில் துரைசாமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வெங்கடாசலம் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் அப்போதே இசைவு தீர்ப்பாயத்தில் இந்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தணிகாச்சலத்தை   நியமித்து உத்தரவிட்டிருந்தது. 

இருதரப்பையும் விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி தணிகாச்சலம் , வெங்கடாசம்  பங்குதாரராக உள்ள  நிறுவனத்தை கலைக்க  உத்தரவிட்டதோடு ஆடிட்டர்களான லோகநாதன் மற்றும் வெங்கடாச்சலம் ஆகியோர் வரவு செலவு மற்றும் சொத்து கணக்குக்களை ஆய்வு செய்து பங்குதாரர்களுக்குண்டான பிரித்து அளிக்கும் பங்குகள்  குறித்தும்  இரண்டு மாதத்திற்குள்  அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிந்ததது. 

இதனிடையே துரைசாமி தம் மீது திருப்பூர் மத்திய  குற்றப்பிரிவு போலீசார் பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய கோரி வழக்கு தொடுத்திருந்தார். மனுவில் இசைவு தீர்ப்பாயத்தில் சிவில் வழக்காக பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில் வழக்கை மறைத்து சென்னை உயர்  நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளதாகவும் எனவே போலீசாரின் விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும்  மனுதாரர் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் துரைசாமி உள்ளிட்ட 6 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க வரும் 12 ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 

மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...