முன்னாள் காதலியை அபகரித்ததால் நடந்த கொலையை லவ் ஜிகாத் என மாற்றிய கொலையாளி - திடுக்கிடும் தகவல்



டிசம்பர் 7




வடமாநிலத்தில் லவ் ஜிகாத் பெயரை சொல்லி, தனது முன்னாள் காதலியுடன் பழகிய வாலிபரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் முகமது பட்டா சேக். இவர், ராஜஸ்தானில் தங்கி பணி புரிந்ததாக தெரிகிறது. முகமதுவை ஒருவர் கோடாரியால் கடுமையாகத் தாக்கி பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்து எரித்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். 



அதில், இந்தச் சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சாமண்ட் மாவட்டத்தில் தேவ் சாலையில் உள்ள ராஜ்நகரில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பாதி எரிந்த நிலையில் இருந்த சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் இருந்து கோடாரி மற்றும் இருசக்கர வாகனத்தை போலீஸார் கைப்பற்றினர். இதுகுறித்து ராஜஸ்தான் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வீடியோவில் ஒருவர், முகமதுவை கோடாரியை கொண்டு கடுமையாகத் தாக்குகிறார். தாக்குதலுக்குள்ளான முகமது தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார். மீண்டும் தொடர்ந்து அந்த நபர் தாக்குகிறார். இதனை மற்றொருவர் வீடியோ பதிவு செய்கிறார். தாக்குதலுக்குள்ளான முகமது மயக்கமடைந்து கீழே விழுகிறார். பின்னர், அவர் மீது அந்த நபர் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்து எரிக்கிறார். இந்தக் கொடூர காட்சியை முழுமையாகப் படம் பிடித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து மற்றோரு வீடியோவை பதிவிட்ட அந்த நபர், அதில் லவ் ஜிகாதில் இருந்து சிறுமியை காப்பாற்றவே இப்படிச் செய்ததாக தனது குற்றத்தை நியாயப்படுத்தி ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டிருந்தார். 

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி ஷம்பூநாத் ரைகேர் இன்று காலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரனை நடத்தியதில், ஷம்பூநாத்தின் முன்னாள் காதலியுடன் முகமது பட்டா பழகி வந்ததால், இந்த கொலை நடந்து உள்ளது. ஆனால், இதனை லவ் ஜிகாதில் இருந்து சிறுமியை காப்பாற்றவே இப்படி செய்ததாகக் கொலையாளி வீடியோவில் பதிவு செய்து இருந்தது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...