முன்னாள் காதலியை அபகரித்ததால் நடந்த கொலையை லவ் ஜிகாத் என மாற்றிய கொலையாளி - திடுக்கிடும் தகவல்



டிசம்பர் 7




வடமாநிலத்தில் லவ் ஜிகாத் பெயரை சொல்லி, தனது முன்னாள் காதலியுடன் பழகிய வாலிபரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் முகமது பட்டா சேக். இவர், ராஜஸ்தானில் தங்கி பணி புரிந்ததாக தெரிகிறது. முகமதுவை ஒருவர் கோடாரியால் கடுமையாகத் தாக்கி பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்து எரித்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். 



அதில், இந்தச் சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சாமண்ட் மாவட்டத்தில் தேவ் சாலையில் உள்ள ராஜ்நகரில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பாதி எரிந்த நிலையில் இருந்த சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் இருந்து கோடாரி மற்றும் இருசக்கர வாகனத்தை போலீஸார் கைப்பற்றினர். இதுகுறித்து ராஜஸ்தான் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வீடியோவில் ஒருவர், முகமதுவை கோடாரியை கொண்டு கடுமையாகத் தாக்குகிறார். தாக்குதலுக்குள்ளான முகமது தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார். மீண்டும் தொடர்ந்து அந்த நபர் தாக்குகிறார். இதனை மற்றொருவர் வீடியோ பதிவு செய்கிறார். தாக்குதலுக்குள்ளான முகமது மயக்கமடைந்து கீழே விழுகிறார். பின்னர், அவர் மீது அந்த நபர் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்து எரிக்கிறார். இந்தக் கொடூர காட்சியை முழுமையாகப் படம் பிடித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து மற்றோரு வீடியோவை பதிவிட்ட அந்த நபர், அதில் லவ் ஜிகாதில் இருந்து சிறுமியை காப்பாற்றவே இப்படிச் செய்ததாக தனது குற்றத்தை நியாயப்படுத்தி ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டிருந்தார். 

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி ஷம்பூநாத் ரைகேர் இன்று காலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரனை நடத்தியதில், ஷம்பூநாத்தின் முன்னாள் காதலியுடன் முகமது பட்டா பழகி வந்ததால், இந்த கொலை நடந்து உள்ளது. ஆனால், இதனை லவ் ஜிகாதில் இருந்து சிறுமியை காப்பாற்றவே இப்படி செய்ததாகக் கொலையாளி வீடியோவில் பதிவு செய்து இருந்தது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...