ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு : போட்டிக்களத்தில் 59 பேர்


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் அலுவலர் வேலுச்சாமி இன்று வெளியிட்டார். அதில், அதிமுக, திமுக, பாஜக வேட்பாளர்கள் உள்பட 59 பேர் களத்தில் உள்ளனர். சுயேட்சை வேட்பாளர் TTV தினகரனும்  உள்ளார் ஆனால் நடிகர் விஷாலுக்கு போட்டியிட வாய்ப்பு இல்லை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்து வருகிறது. இதையடுத்து, ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து அதிமுக, திமுக, பாஜக., நம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட 131 பேர் 145 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது.

அப்போது, அவர்களில் 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாகத் தேர்தல் அலுவலர் வேலுச்சாமி அறிவித்தார். மேலும், நடிகர் விஷால், ஜெ.தீபா உள்பட 73 பேரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

நடிகர் விஷால் வேட்பு மனு விவகாரத்தில் எப்படி பரிசீலனை நடந்தது என்ற விளக்கத்தையும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி வெளியிட்டார். இதனால், நடிகர் விஷால் கடும் அதிர்ச்சி அடைந்தார். விஷாலுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு குரல் கொடுத்தன. இதனால் இந்த விவகாரம் கடும் சர்ச்சையை உருவாக்கியது.

இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 145 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் மீதான பரிசீலனையின் போது 73 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற இன்று மாலை 3 மணி வரை நேரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று 14 சுயேட்சைகள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் இறுதி வேட்பாளர் பட்டியலில் 59 பேர் இடம் பெற்றுள்ளனர். எனத் தெரிவித்தார். 

இதன்மூலம், நடிகர் விஷாலுக்கு ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்பது உறுதியானது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...