கோவையில் தூய்மை இடங்கள் பற்றி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும்

கோவை, டிசம்பர் 8

தேசிய அளவில் ”தூய்மையான நகரங்கள் தரவரிசைப்பட்டியல் ஸ்வச் சர்வெக்ஷான் 2018” குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. டிசம்பர் 15-ம் தேதி ஸ்வச் பாரத் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளால் குறிப்பிட்ட இடங்களை ஆய்வு செய்து தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது

மாநகராட்சியின் பிரதானக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஸ்வச் சர்வெக்ஷான் 2018 - தேசிய அளவிலான தூய்மையான நகரங்கள் பட்டியலில், கோவை மாநகராட்சி சென்ற ஆண்டைவிட மிகச்சிறந்த தரப்பட்டியலில் இடம் பெறுவதற்கு தேவையான அனைத்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுமாறும், தரவரிசைப்பட்டியலுக்கு தேவையான உரிய ஆவணங்களை விரைவில் தயார் செய்ய வேண்டும் என அனைத்து மண்டல உதவி ஆணையாளர்களுக்கும், சுகாதார அலுவலகர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. 

மேலும், ஸ்வச் சர்வெக்ஷான் 2018-ஐ முன்னிட்டு பள்ளிகள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், குடியிருப்பு சங்கங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்களில் கடைபிடிக்கப்படும் சுகாதாரப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து மாநகராட்சி அளவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதனடிப்படையில், சுற்றுப்புறச்சூழல், சுகாதாரம் மற்றும் சுத்தமான கழிப்பறைகள், ஸ்வச் பாரத் குறித்த விழிப்புணர்வு, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பிரிப்பது போன்ற அம்சங்களைப் பொருத்து தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். 

ஆகவே, இம்முயற்சியில் பங்குபெற ஆர்வமுள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், குடியிருப்பு சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் டிசம்பர் 14-ம் தேதிக்குள் தங்களுடைய வளாகங்களில் கடைபிடிக்கப்படும் தூய்மைப்பணிகள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் முழுவிவரங்களையும் [email protected] என்ற மின்னஞ்சலில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு, பெறப்படும் பதிவுகளைக் கொண்டு டிசம்பர் 15-ம் தேதி ஸ்வச் பாரத் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளால் குறிப்பிட்ட இடங்களை ஆய்வு செய்து தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...