கோவை கடற்படையை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தபெதிக-வினர் கைது


கோவை, டிசம்பர் 09

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களைப் பாதுகாக்கத் தவறிய இந்திய கடற்படையைக் கண்டித்து ரெட் பீல்ட்ஸ் சாலையிலுள்ள கடற்படை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.



ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போகியுள்ளனர். இவர்களைக் காப்பாற்ற தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், அவினாசி சாலையில் இருந்து கப்பற்படை அமைந்துள்ள சாலையில் பேரணியாகச் சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். 

அப்போது, மீனவர்களைக் காப்பற்ற மத்திய, மாநில அரசு தவறி விட்டதாகவும், பத்து நாட்கள் ஆகியும் முழுமையாக மீனவர்களை மீட்க முடியாத மத்தியஅரசு, கப்பற்படையை இழுத்து மூட வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பினர்.



மீனவர்களைக் காப்பாற்றத் தவறிய மத்திய அரசு, கன்னியாகுமரி மாவட்டத்தைப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க மறுத்து வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார். தமிழ்ஈழப் படுகொலை நடந்த போது இலங்கைக்குப் போர் கப்பல் கொடுத்த மத்திய அரசு, மீனவர்களைக் காப்பாற்ற முன் வரவில்லை என்றும், மாநில அரசு இறந்த மீனவர்களுக்கு ரூ. 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். 

இதனிடையே, குஜராத் மீனவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் மத்திய அரசு, இது ஜனநாயக நாடு சாதி மதத்திற்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் பாகுபாடு பார்க்கக்கூடாது எனத் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...