ஓ.என்.ஜி.சிக்கு எதிராகப் போராட்டம்: பேராசிரியர் ஜெயராமன் குடும்பத்தினருடன் மீண்டும் கைது

டிசம்பர் 11

ஓ.என்.ஜி.சிக்கு எதிராகப் போராட பொதுமக்களைத் தூண்டி விடுவதாகப் பேராசிரியர் ஜெயராமன், மனைவி மற்றும் மகன்களுடன் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் வயல்களில் எண்ணைக் குழாய் பதித்து மீத்தேன், ஷேல் கியாஸ் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. இதனால், அப்பகுதி விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு குடிநீர் மற்றும் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, தஞ்சை மாவட்டத்தில் கதிராமங்கலம், திருவாரூர் மற்றும் நன்னிலம் பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணைக் குழாய் பதிக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. இதில், அடிக்கடி கசிவு ஏற்பட்டு கச்சா எண்ணை வயலில் பரவி, நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டது. இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களில் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் கிராமமக்கள் ஈடுபட்டனர். இதனால், ஜெயராமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயராமன் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால், அவர் தொடர்ந்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நன்னிலம் பகுதியில் தீயணைப்பு நிலையத்துக்குப் பின்புறம் தென்னஞ்சார் என்ற இடத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆழ்குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இதையொட்டி, ஏராளமான கனரக வாகனங்கள் அங்கு வந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைக் கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் இப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, பொதுமக்களுடன் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தார் நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. 

இந்நிலையில், மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் அப்பகுதி மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், பணிகளைத் தடுத்து நிறுத்தவும், நாம் தமிழர் கட்சியினர் இன்று நடத்தவிருந்த முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்கவும் அங்கு வந்துள்ளார். இதையறிந்த நன்னிலம் போலீசார், பேருந்துநிலையம் பகுதிக்கு மனைவி சித்ரா மற்றும் மகன்களுடன் பேராசிரியர் ஜெயராமன் வந்தபோது அவரைத் தடுத்து நிறுத்தினர். அப்போது, அங்கு நின்றிருந்த கிராமமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிராக போராட மக்களை தூண்டுவதாகக் கூறி பேராசிரியர் ஜெயராமனை மீண்டும் போலீசார் கைது செய்தனர். அப்போது, உடனிருந்த அவரது மனைவி சித்ரா, மகன்கள் இளம்பரிதி, அருள் ஆகியோரையும் போலீசார் கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...